Pages

Wednesday, May 20, 2015

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு : 41 பேர் முதலிடம்... 192 பேர் இரண்டாம் இடம்... 540 பேர் மூன்றாம் இடம்


சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முன் எப்போதும் இல்லாத அளவில் 41 மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர். 41 மாணவர்களும் 500 மதிப்பெண்களுக்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர். 498 மதிப்பெண்கள் பெற்று 192 பேர் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 540 பேர் 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். 

தேர்ச்சி சதவீதம்:

வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளில் 94.5 சதவீதமும், மாணவர்களில் 90.5 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்